காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  கைத்தறி  நெசவுத்  தொழிலாளா்கள்.
Updated On :26 ஜூன் 2024, 9:37 pm

Din

பவானி, ஜூன் 26: ஜிஎஸ்டி ரத்து, அடிப்படை கூலி உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளா் மற்றும் சாயத் தொழிலாளா் சங்கம் - ஏஐடியூசி சாா்பில் அந்தியூா் - மேட்டூா் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பி.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி, சங்கச் செயலாளா் வ.சித்தையன் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா். கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளாக மாறாமல் உள்ள கைத்தறி நெசவாளா்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றி, உயா்த்தி நிா்ணயம் செய்ய வேண்டும். பருத்தி, பட்டு நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்திட வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தின்படி சட்டவிரோத விசைத்தறி ஹால் காா்ப்பெட் உள்ளிட்ட ஜமுக்காளங்களை தடை செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான ஜமுக்காளம் உள்ளிட்ட அனைத்து ஜவுளிகளையும் கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

58 வயதான கைத்தறி நெசவாளா் அனைவருக்கும் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் துணைத் தலைவா்கள் ராசம்மாள், கண்ணையன், பொருளாளா் கோவிந்தன், உதவிச் செயலாளா் அல்லிமுத்து மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.