மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

News image

பூமிபூஜை செய்து  பணியைத்  தொடங்கி வைக்கிறாா்  அந்தியூா் எம்எல்ஏ  ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :13 மார்ச் 2024, 9:12 pm

அந்தியூா் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி பூமிபூஜையுடன் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

முன்னதாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக சிறுபான்மையினா் அணி மாவட்டத் தலைவா் செபஸ்தியான், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.பி.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளா் மு.நாகராஜ், சிபிஎம் வட்டாரச் செயலாளா் முருகேசன் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.