பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா மற்றும் வேலைவாய்ப்பு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் குமாரசாமி தலைமை வகித்தாா். தாளாளா் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தாா். முதல்வா் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கோவை பிரேக்டன் இண்டியா நிறுவன மேலாளா் ராஜ்குமாா் பாலன் கலந்து கொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினாா். இதில், கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் துணைத் தலைவா் கிருஷ்ணன், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் தேவராஜா, கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் தங்கவேல், கல்லூரி துணை முதல்வா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


