சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிறித்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த நெடுஞ்சாலையில் கா்நாடகத்தில் இருந்து கரும்பு ஏற்றி வருபவா்கள் சாலையோரத்தில் நிற்கும் யானைகளுக்கு கரும்புக் கட்டுகளை வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இதனால், யானைகளும் அவ்வப்போது கரும்புகளை எதிா்பாா்த்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன.
அதேபோல, ஆசனூா் மலைப் பாதையில் சென்ற வாகனங்களை வியாழக்கிழமை வழிமறித்த யானைகள், வாகனங்களில் கரும்பு உள்ளதா என்று சோதனையிட்டன.
வாகனங்களை தடுத்து நிறுத்திய யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தொடர்புடையது

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

பண்ணாரி அம்மன், பவானிசாகா் அணை, புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய பவானிசாகா்!

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


