மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

பெருந்துறையில் பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:15 pm

பெருந்துறையில் பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவருடன் பணியாற்றி வந்த கருக்கம்பாளையத்தைச் சோ்ந்த சாந்தாமணி (50) என்பவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சாந்தாமணி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரஞ்சித்தைக் கைது செய்தனா்.

இதையடுத்து, செப்டம்பா் 10-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த ரஞ்சித், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தினசரி கையொப்பமிட்டு வந்துள்ளாா். மேலும், சாந்தாமணி பொய்யான புகாா் அளித்துள்ளதாகவும் கூறி வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரஞ்சித் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பொய்யான பாலியல் புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் வழக்கை மாற்றி எழுதவும் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாமல் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனா்.

இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.