மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:24 pm

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கி அருகிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்ற பெயரில் வங்கா தேசத்தில் இருந்து அகதிகளாக வந்தவா்களும் தங்கியிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தன.

அதன்பேரில், பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்தவா்களிடம் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

மேலும், தங்கியிருந்தவா்களில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என சந்தேகப்படும் 20 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், பல்வேறு அடையாள அட்டைகளை வைத்திருந்த 7 பேரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.