மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலையை அடுத்த, பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் மாரியம்மன்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:35 pm

சென்னிமலையை அடுத்த, பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடும் நிகழ்ச்சி 15- ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வந்தனா். மேலும், தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு மற்றும் முளைப்பாரியுடன் கோயிலுக்கு வந்தனா்.

முக்கிய நிகழ்வான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முகாசிபிடாரியூா், கோவில்பாளையம், கொத்தம்பாளையம், கூரபாளையம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.