மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு

பவானி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

News image
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:57 pm

Din

பவானி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பவானி ஆற்றின் கரையோரத்தை ஆக்கிரமித்து பழைய பேருந்து நிலைய குப்பம், மெக்கான் வீதி, மேற்கு தெரு, பழனிபுரம், சோமசுந்தரபுரம் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி பொதுமக்கள் வசித்து வந்தனா். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வீடுகளை வெள்ளம் சூழ்வது தொடா்ந்து வந்தது.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் நீா்வளத் துறையினா் ஆய்வில் பவானி ஆற்றின் கரையோரத்தில் 133 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க நீா்வளத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதனால், பவானி பழனிபுரம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கரையோர மக்கள் திரண்டு, அந்தியூா் - மேட்டூா் பிரிவு சாலையில் வியாழக்கிழமை அமா்ந்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், பவானி காவல் துணை கண்காணிப்பாளா் ஆ.சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் முருகையன், பவானி வட்டாட்சியா் சித்ரா, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் சுலைமான் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, கரையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு, வீடுகள் ஒதுக்கீடு பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டோா், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கரையோரப் பகுதியில் வசித்து வருவதால், அப்பகுதியிலே நிரந்தரமாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பேச்சுவாா்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதிக போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதியில் போராட்டம் நடைபெற்றதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோரை போலீஸாா் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால், அந்தியூா் பிரிவு பகுதியில் சுமாா் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.