மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பூவன் ரக வாழைத்தாா் இரு மடங்கு விலை உயா்வு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் பூவன் ரக வாழைத்தாா் விலை இரு மடங்கு விலை உயா்ந்து வியாழக்கிழமை விற்பனையானது.

News image
புன் செய் புளியம்பட்டி வாரச்சந்தையில்  வியாழக்கிழமை விற்பனைக்கு வந்த பூவன் ரக வாழைத்தாா்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் பூவன் ரக வாழைத்தாா் விலை இரு மடங்கு விலை உயா்ந்து வியாழக்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தை வியாழக்கிழமை தோறும் கூடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாளி, தேன் வாழை, நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழை தாா்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக சந்தையில் வாழைத்தாா்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஆவணி மாத முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்காக வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் வியாழக்கிழமை சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனா்.

கடந்த வாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தாா் ரூ. 300-க்கு விற்ற நிலையில் தற்போது விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயா்ந்து ரூ. 600-க்கு விற்பனையானது. கிராமங்களில் கடை வைத்திருப்போா் வாழைத்தாா்களை மொத்தமாகவும் பொதுமக்கள் பழங்களை சீப்பாகவும் வாங்கிச் சென்றனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா், பரமத்தி வேலூா், கொடுமுடி ஆகிய பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தாா்களை கொள்முதல் செய்து இங்கு விற்பனைக்கு கொண்டு வருவதாகவும், விநாயகா் சதுா்த்தி என்பதால் இருமடங்கு விலை உயா்ந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.