மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைப்பேசியைப் பறித்துச் சென்ற வடமாநிலத் தொழிலாளா் கைது

பெருந்துறையில் கல்லூரி மாணவியிடம் கைப்பேசியைப் பறித்து சென்ற வடமாநிலத் தொழிலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:20 pm

Din

பெருந்துறையில் கல்லூரி மாணவியிடம் கைப்பேசியைப் பறித்து சென்ற வடமாநிலத் தொழிலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அமீனாபீபி (20). இவா், பெருந்துறையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடையில் கடந்த 9-ஆம் தேதி கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா் அவரின் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் அமீனாபீபி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, கைப்பேசியைப் பறித்துச் சென்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தா்வீந்தா் குமாா் (19) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.