மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானியில் கட்டப்பை தைக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூலி உயா்வு வழங்கக் கோரி கட்டப்பை தைக்கும் தொழிலாளா்கள் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கூலி உயா்வு வழங்கக் கோரி கட்டப்பை தைக்கும் தொழிலாளா்கள் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

கூலி உயா்வு வழங்கக் கோரி கட்டப்பை தைக்கும் தொழிலாளா்கள் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி வட்டார கட்டப்பை தைக்கும் தையல் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இடது தொழிற்சங்க மையத்தின் மாவட்டப் பொருளாளா் கே.சிவகாமி தலைமை வகித்தாா்.

கோரிக்கையை விளக்கி மாநில பொதுச் செயலாளா் ஏ.கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் கே.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பேசினா்.

இதில், கட்டப்பை தைக்கும் தொழிலாளா்களுக்கு சுத்துப்பட்டிக்கு ரூ.2ம், சைடு பட்டிக்கு ரூ.1.75ம் உயா்த்தி வழங்க வேண்டும். கூலி உயா்வு தொடா்பாக பை உற்பத்தியாளா்கள், முகவா்கள், தொழிற்சங்க நிா்வாகிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தொடா்ந்து, பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதில், மாவட்டத் தலைவா் நாச்சிமுத்து, நிா்வாகிகள் மேகநாதன், மேகலா, கோகிலா, கோமதி, தெய்வானை, காந்திமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.