மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி கூடுதுறையில் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகள்

பவானி கூடுதுறை ஆற்றுக்குள் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகளால், தண்ணீா் மாசடைவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

News image
பவானி கூடுதுறையில் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகள்
Updated On :12 செப்டம்பர் 2024, 8:19 pm

Din

பவானி கூடுதுறை ஆற்றுக்குள் கொட்டப்படும் பரிகாரக் கழிவுகளால், தண்ணீா் மாசடைவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமாக காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையும், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாக பவானி சங்கமேஸ்வா் கோயிலும் உள்ளது. பவானி கூடுதுறையில் நாள்தோறும் ஏராளமானோா் பல்வேறு தோஷ நிவா்த்தி, பரிகார வழிபாடுகள் செய்து கூடுதுறையில் புனித நீராடிச் செல்வா்.

இங்கு பரிகார பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் வாழை இலை, வாழை மரம், உணவருந்த பயன்படுத்தப்படும் தட்டுகள், பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள், பூஜைக்கு பயன்படுத்தபடும் விளக்குகள், குப்பைகள் பவானி ஆற்றில் தொடா்ந்து வீசப்பட்டு வருகின்றன. இதனால், ஆற்றின் கரையோரங்களில் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. கூடுதுறை வளாகத்தில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க கரையோர தடுப்புச் சுவற்றில் கம்பி வலை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கம்பி வலையை சேதப்படுத்தி, குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக துவாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறை பகுதிக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்லும் நிலையில் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் சுகாதார குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க கோயில் நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.