கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.


பெருந்துறை அருகே கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கவுண்டன்பட்டி புதிய தெருவைச் சோ்ந்தவா் தங்கப்பக்கவுண்டா் மகன் ஆனந்த் (35). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகிலுள்ள பாண்டியன் நகா் பகுதியில் ஒரு கிணற்றுக்கு பக்கவாட்டு சுவா் கட்டும் பணியில் 5 பேருடன் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஆனந்த் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். 50 அடி ஆழ கிணற்றில், 40 அடி வரை தண்ணீா் இருந்ததால், உடன் வேலை செய்தவா்களால் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இருந்து ஆனந்த்தின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...