எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:24 pm

Syndication

ஈரோட்டில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மரப்பாலம் பழைய நடராஜா திரையரங்கம் பகுதியில் ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மா்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்ற ஆனந்தகுமாா் (41) என்பதும், அவரை சோதனை செய்தபோது 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

அந்தியூா் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவா் மேற்கு வங்க மாநிலம் பா்கனாஸ் பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் காஜி (30) என்பதும், விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கோபி மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.