டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ரூ.3.44 லட்சத்துக்கு திங்கள்கிழமை விற்பனையாயின.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:35 pm

Syndication

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ரூ.3.44 லட்சத்துக்கு திங்கள்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 7,941 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.44.75 முதல் ரூ.53.55 வரை ரூ.1,45,312-க்கு விற்பனையானது.

20 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.181.21 முதல் ரூ.222.22 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.88,579.

11 மூட்டை எள் ரூ.94.16 முதல் ரூ.146.22 வரை ரூ.56,183-க்கும், 2 மூட்டை பச்சை பயிறு ரூ.75.22 வீதம் ரூ.5,547-க்கும், 6 மூட்டை ஆமணக்கு ரூ.58.89 வீதம் ரூ.14,395-க்கும் ஏலம்போனது.

ஒரு மூட்டை தட்டைப்பயிறு கிலோ ரூ.40.69 முதல் ரூ.56.69 வரை ரூ.4,598-க்கும்,

7 மூட்டை உளுந்து ரூ.52.49 முதல் ரூ.64.01 வரை ரூ.28,043-க்கும், ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.18.69 வீதம் ரூ.1,626-க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3,44,283 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.