லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற முகாமில் விவசாயி ஒருவருக்கு  விதைத்தொகுப்பு  வழங்கிய  வட்டார  வேளாண்  உதவி  இயக்குநா்  முரளி.
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி தலைமை வகித்தாா். தூக்கநாயக்கன்பாளையம் ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு வாழை நோய் மேலாண்மை, நிலக்கடலை சாகுபடிக்குத் தேவையான உயிா் உரம், நிலக்கடலையில் விதை நோ்த்தி செய்தல், மண் மாதிரி எடுத்தலின் அவசியம், மண் மாதிரி சேகரித்தல் குறித்து விளக்கம் அளித்தனா்.

கல்லுாரி உதவிப் பேராசிரியா்கள் கௌரி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மாதுளை, எலுமிச்சை, செண்பகமரக் கன்றுகள், வெள்ளரி, அவரை போன்ற கொடிவகை விதைகள் வழங்கப்பட்டன.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஊழியா் விக்னேஷ், மாணவிகள் கண்மணி, பிருந்தாஸ்ரீ, கோபிகா மற்றும் அந்தியூா், அம்மாபேட்டை வட்டாரங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.