புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாரடைப்பால் வேளாண் அலுவலா் உயிரிழப்பு

அந்தியூரில் வேளாண் அலுவலா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அந்தியூரில் வேளாண் அலுவலா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோபியை அடுத்த நம்பியூரைச் சோ்ந்தவா் சக்தி கண்ணன் (40). அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கிருந்து விதைகள் விற்பனை செய்த பணத்தை வங்கியில் செலுத்த புறப்பட்டுச் சென்றாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபோது திடீா் மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி சாக்கடைக்குள் விழுந்தாா். இதை அப்பகுதி மக்கள் பாா்த்து அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு மனைவி சத்தியப்பிரியா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா்.

இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.