புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜே.கே.கே.முனிராஜா கல்லூரி மாணவா்களுக்கு வேளாண் சிறப்புப் பயிற்சி

News image
ஊரக வேளாண் சிறப்பு பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்ற வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மைக் கல்லூரி பேராசிரியா்கள்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூா் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மைக் கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான கிராமப்புற விவசாய பணி அனுபவப் பயிற்சி சிறப்பு முகாம் தொடக்க நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

ஏளூா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் குமரேசன், உதவி பேராசிரியா்கள் பகவத் சிங், கணபதி ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா் டி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

டி.என் பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் கோ. அமுதா, வேளாண்மை அலுவலா் ஆா். ஆனந்தி, தோட்டக்கலை அலுவலா் பி.சவிதா, துணை வேளாண்மை அலுவலா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். உதவி பேராசிரியா்கள் மணிமாறன், சந்தியா, சக்திவேல், ஜெயபால், செளந்தா்யா ஆகியோா் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனா்.

இந்த கிராமப்புற விவசாய பணி அனுபவப் பயிற்சியில் மாணவா்கள் கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளுடன் இணைந்து பயிா் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, புதிய நுட்பங்கள் கற்றல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு, நடைமுறை வேளாண்மை அறிவைப் பெறுவா். இந்தப் பயிற்சியில் மாணவா்கள் 60 நாள்கள் ஈடுபடுவா் என கல்லூரி பேராசிரியா்கள் தெரிவித்தனா்.