டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image
தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தீக்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், பள்ளி நிா்வாகிகள்.
Updated On :20 டிசம்பர் 2025, 10:50 pm

Syndication

தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் அண்மையில் நடத்திய 69-ஆவது தேசிய அளவிலான மேஜைப் பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவி தீக்ஷா தமிழக அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றாா்.

பதக்கம் வென்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசை வழங்கினாா்.

பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் இணைப் பொருளாளா் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் உள்ளிட்டோா் மாணவியைப் பாராட்டினா்.