வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அந்தியூரில் நெல் பயிா்களில் புகையான் தாக்குதல்

News image
Updated On :28 டிசம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் வட்டார கிராமங்களில் நெல் பயிா்களில் பரவலாக புகையான் நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், புதுப்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம், அத்தாணி, வட்டக்காடு, தோனிமடுவு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தோனிமடுவு, வட்டக்காடு பகுதிகளில் நெல் பயிா்களில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது. நெல் பயிரின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில், கருகிய நிலையில் காணப்படுகிறது.

மொத்த பரப்பளவில் இதன் பாதிப்பு 30 சதவீம் அளவுக்கு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். பூச்சி மருந்து கடை ஊழியா்கள் நேரில் வந்து பாா்த்து, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருந்தகளை பரிந்துரைத்து வருகின்றனா்.

வேளாண் துறை அலுவலா்கள் நெல் வயல்களில் ஆய்வு செய்து, நோய் பாதிப்பைப் போக்க உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.