கொடுமுடியில் ரூ.74.65 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 9,859 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
Published on

மொடக்குறிச்சி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 9,859 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில் கிலோ ரூ.35 முதல் ரூ.62.89 வரையும், சராசரியாக ரூ.57.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,982 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 956-க்கு விற்பனையாயின.

இதேபோல தேங்காய்ப் பருப்பு 474 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல் தரம் கிலோ ரூ.163.89 முதல் ரு.199.99 வரையும், சராசரியாக ரூ.198.99-க்கும், இரண்டாம் தரம் ரூ.124.99 முதல் ரூ.188.17 வரையும், சராசரியாக ரூ.161.89-க்கும் ஏலம் போனது. மொத்தமாக 22,556 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்பு ரூ.37 லட்சத்து 87 ஆயிரத்து 689-க்கு விற்பனை நடைபெற்றது.

இதேபோல எள் 418 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில் வெள்ளை ரகம் ஒரு கிலோ ரூ.93.09 முதல் ரூ.119 வரையும், சராசரி விலையாக ரூ.117.81-க்கும் ஏலம் போனது. மொத்தம் 31,284 கிலோ எடையுள்ள எள் ரூ.35 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

மொத்தமாக தேங்காய், தேங்காய்ப் பருப்பு மற்றும் எள் ஆகியவை ரூ.74 லட்சத்து 65 ஆயிரத்து 525-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com