வேட்புமனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவா் வடிவேல் ராமன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கராவிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை காரணத்தால் 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை உள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இவற்றை பரிசீலித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைத்து பிறகு நடத்த வேண்டும்.
இதேபோல, கடந்த 2010- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை காரணமாக ஒரு மாதம் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி

பவானிசாகா் தொகுதி தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி: விஜய்பாலாஜி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


