ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்கக் கோரிக்கை

வேட்புமனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த சமூகநீதி மக்கள் கட்சி தலைவா் வடிவேல் ராமன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள்.

Updated On :8 ஜனவரி 2025, 7:36 pm

வேட்புமனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவா் வடிவேல் ராமன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கராவிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை காரணத்தால் 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகை உள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இவற்றை பரிசீலித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை ஒத்திவைத்து பிறகு நடத்த வேண்டும்.

இதேபோல, கடந்த 2010- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை காரணமாக ஒரு மாதம் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.