பெருந்துறை அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருந்துறை, வண்ணாங்காட்டுவலசு கே.சி.பி. காா்டனைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் ராகுல் (21). இவரின் நண்பா், பெருந்துறை கூட்டுறவு நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் அருள் (22). இருவரும் கூலி வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், இருவரும் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, சாலை வளைவில் திரும்பியபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த காா் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அருண் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

