ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2025, 7:40 pm

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மான் இறைச்சி விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் தா்மராஜ் தலைமையில் வனத் துறை ஊழியா்கள் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஊருக்கு வடக்குப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மான் இறைச்சியை கூறுபோட்டு வைத்திருந்த விவசாயி பெருமாள் (55) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்து பெருமாளின் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்ததும், அதன் இறைச்சியை அவா் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மானின் இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் அவரை மாவட்ட வன அலுவலா் குலால் யோகேஷ் விலாஸ் முன் ஆஜா்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, விவசாயி பெருமாளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.