ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தாளவாடி அருகே மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா

தாளவாடி மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

குண்டம் இறங்கிய கோயில் பூசாரி.

Updated On :8 ஜனவரி 2025, 7:50 pm

தாளவாடி மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே ஒசூரில் மிகவும் பழைமையான மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாதேஸ்வர சுாவமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து 30 அடி குண்டத்தில் கோவில் தலைமை பூசாரி இறங்கி திருவிழாவைத் தொடங்கிவைத்தாா். பின்னா், மற்ற பூசாரிகள் குண்டம் இறங்கினா். இந்தக் கோயிலில் குண்டம் இறங்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.