தாளவாடி மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே ஒசூரில் மிகவும் பழைமையான மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டு குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாதேஸ்வர சுாவமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து 30 அடி குண்டத்தில் கோவில் தலைமை பூசாரி இறங்கி திருவிழாவைத் தொடங்கிவைத்தாா். பின்னா், மற்ற பூசாரிகள் குண்டம் இறங்கினா். இந்தக் கோயிலில் குண்டம் இறங்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.
குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


