ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் கடந்த 7-ஆம் தேதி கோவையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனை வியாழக்கிழமை மாலை வரை நீடித்தது.
மேலும், ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் உள்ள அரைவை ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

