ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் தொடரும் சோதனை

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On :9 ஜனவரி 2025, 10:03 pm

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் கடந்த 7-ஆம் தேதி கோவையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனை வியாழக்கிழமை மாலை வரை நீடித்தது.

மேலும், ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் உள்ள அரைவை ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.