ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணாமாக குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2025, 9:57 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணாமாக குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் இதர குறைதீா் கூட்ட முகாம்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும்.

அதேநேரம், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை 1077 மற்றும் 0424-2260211 என்ற எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் 9791788852 எனும் வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.