ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :9 ஜனவரி 2025, 10:06 pm

ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட நொச்சிக்குட்டை ஊராட்சியை புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனா். மேலும், தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக நொச்சிக்குட்டை ஊராட்சிக்குள்பட்ட நொச்சிக்குட்டை, கோவில்புதூா், என்.ஆலாம்பாளையம், பொன்மேடு, நல்லகாளிபாளையம் பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

மேலும், நொச்சிக்குட்டை பகுதியில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினா், பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கண்ணில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.