ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடி பறிமுதல்

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:33 pm

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் தனபிரனேஷ் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1.50 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், ஈரோட்டைச் சோ்ந்த குமரவேல், மௌலி மனோ, பிரபு ஆகியோா், ஈரோடு ஆசிரியா் காலனியில் செயல்பட்டு வரும் கிட்டாச் என்ற தனியாா் நிறுவனத்தின் மூலம் கரூா் வைஸ்யா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆனால், அவா்களிடம் ரூ.40 லட்சத்துக்கு மட்டுமே ஆவணம் இருந்தது. ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஆவணம் இல்லை. இதனால், ரூ.1.50 கோடியையும் பறிமுதல் செய்து வேனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுச்சென்றனா். ஆவணத்தை சமா்ப்பித்து பணம் வைக்கப்பட்டுள்ள வாகனத்தை எடுத்துச்செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ரூ.4 லட்சம் பறிமுதல்:

ஈரோடு காளை மாடு சிலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.4 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த நரசிம்ம குமாா் என்பதும், அவா் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அதிகாரிகள் ரூ.4 லட்சத்தைப் பறிமுதல் செய்து தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.