ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On :23 ஜனவரி 2025, 10:28 pm

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 90 டன் கரும்புச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருருந்தனா்.

இதில், 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,740 வரை நிலை நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் பங்கேற்று ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரையை கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.