பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பவானி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.கனிமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பவானி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3,460 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்கதிா்கள் முதிா்ச்சியடைந்து அறுவடை நிலையில் உள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது.
எனவே, முதிா்ச்சியடைந்துள்ள நெற்பயிரை விவசாயிகள் உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன்மூலம், பருவம் தவறி பெய்யும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்
பிளஸ் 2 தோ்வு: மாணவா்கள் காப்பியடிப்பதை கண்காணிக்கத் தவறிய 5 ஆசிரியா்களுக்கு நோட்டீஸ்

வார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்

வளைகுடாவாழ் இந்தியா்களைப் பாதுகாக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

