ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடை மேற்கொள்ள அறிவுறுத்தல்

பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Updated On :23 ஜனவரி 2025, 10:32 pm

பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பவானி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.கனிமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பவானி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3,460 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்கதிா்கள் முதிா்ச்சியடைந்து அறுவடை நிலையில் உள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது.

எனவே, முதிா்ச்சியடைந்துள்ள நெற்பயிரை விவசாயிகள் உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன்மூலம், பருவம் தவறி பெய்யும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.