2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சிறுவன் உயிரிழப்பு: அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்

ஓடையில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அங்கன்வாடி ஊழியா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:37 pm

Syndication

ஓடையில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அங்கன்வாடி ஊழியா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு சூரம்பட்டி வேப்பிலை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி(34), தொழிலாளி. இவரது மனைவி சந்திரகுமாரி (31).

இவா்களது மகன் சஞ்சய் (5) அரசு உதவிபெறும் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 5- ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் சொந்த வேலைக்காக வெளியே சென்ற சக்கரவா்த்தி இளைய மகள் படிக்கும் அங்கன்வாடி மையத்தில் மகன் சஞ்சய்யை விட்டு சென்றுள்ளாா்.

அங்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சய் திடீரென மாயமானாா். அங்கன்வாடி பணியாளா் லாவண்யா பல்வேறு இடங்களில் தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அன்று மாலை அங்கன்வாடி மையம் அருகே செல்லும் பெரும்பள்ளம் ஓடையில் சஞ்சய் சடலாக மீட்கப்பட்டாா்.

போலீஸ் விசாரணையில், சிறுவன் சஞ்சய் ஓடையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பூங்கோதை விசாரணை நடத்தினாா். இதைத்தொடா்ந்து கவனக்குறைவு, மையத்தில் பதிவு செய்யாத சிறுவனை அனுமதித்த காரணத்துக்காக அங்கன்வாடி ஊழியா் லாவண்யாவை பணியிடைநீக்கம் செய்து குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பூங்கோதை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.