இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பையில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பையில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, மதுவிலக்கு போலீஸாா் ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ரயில் நிலையத்தின் பின்புற பகுதியில் கேட்பாரற்று கிடந்த சாக்கு பையை போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாா் கொண்டு வந்தது என்பது குறித்து மதுவிலக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.