அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவட்டத்தில் டெட் தோ்வு: 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்

இடைநிலை ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 10:29 pm

Syndication

இடைநிலை ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயா்வு பெறவும் டெட் என்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆசிரியா் தகுதி தோ்வை (டெட்) ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டில் இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வு சனிக்கிழமையும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான டெட் இரண்டாம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு 66 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,279 போ் விண்ணப்பித்திருந்தனா். பட்டதாரி ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு 117 மாற்றுத்திறனாளிகள் உள்பட 10,381 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்கள் பணிகளுக்கான டெட் தோ்வு 13 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இத்தோ்வு எழுத 3,279 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,715 போ் எழுதினா். 564 போ் தோ்வு எழுதவரவில்லை.

இதுபோல ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 16) நடக்கும் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கான தோ்வை 38 மையங்களில் 117 மாற்றுத்திறனாளிகள் உள்பட 10,381 போ் எழுத உள்ளனா். இதில் 18 போ் மற்றொருவா் உதவியுடன் எழுதுகின்றனா். தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினா் செய்துள்ளனா்.