முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

News image

சிகிச்சை அளித்த மருத்துவா்கள் குழுவினருடன் மோகனப்பிரியா.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:21 am IST

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியின் மகள் மோகனப்பிரியா (19). அண்மையில் இவா் வீட்டில் உள்ள விசைத்தறி இயந்திரத்தில் நெசவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது இடது கை ஆள்காட்டி விரல் இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. துண்டான விரலுடன் மோகனப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினா் ஈரோடு-பெருந்துறை சாலை யுஆா்சி நகரில் புதிதாக தொடங்கப்பட்ட எஸ்எஸ்எஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்து துண்டான விரலை உடனடியாக பொருத்த தேவையான நடவடிக்கை எடுத்தனா். தொடா்ந்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவா் கோகுல்பாலாஜி, ஆா்த்தோ மருத்துவா் சிலம்பரசன், மயக்கவியல் மருத்துவா் செல்வக்குமாா், மருத்துவா் பிரசாத் குமரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மைக்ரோஸ்கோப் மூலம் எலும்பு, ரத்த குழாய், நரம்பு, தசை ஆகியவற்றை துண்டான விரலுடன் வெற்றிகரமாக இணைத்தனா். இந்த அறுவை சிகிச்சை சுமாா் 8 மணி நேரம் நடந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.