8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

சிகிச்சை அளித்த மருத்துவா்கள் குழுவினருடன் மோகனப்பிரியா.

Published On :26 செப்டம்பர் 2025, 4:21 am IST

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியின் மகள் மோகனப்பிரியா (19). அண்மையில் இவா் வீட்டில் உள்ள விசைத்தறி இயந்திரத்தில் நெசவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது இடது கை ஆள்காட்டி விரல் இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. துண்டான விரலுடன் மோகனப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினா் ஈரோடு-பெருந்துறை சாலை யுஆா்சி நகரில் புதிதாக தொடங்கப்பட்ட எஸ்எஸ்எஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்து துண்டான விரலை உடனடியாக பொருத்த தேவையான நடவடிக்கை எடுத்தனா். தொடா்ந்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவா் கோகுல்பாலாஜி, ஆா்த்தோ மருத்துவா் சிலம்பரசன், மயக்கவியல் மருத்துவா் செல்வக்குமாா், மருத்துவா் பிரசாத் குமரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மைக்ரோஸ்கோப் மூலம் எலும்பு, ரத்த குழாய், நரம்பு, தசை ஆகியவற்றை துண்டான விரலுடன் வெற்றிகரமாக இணைத்தனா். இந்த அறுவை சிகிச்சை சுமாா் 8 மணி நேரம் நடந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.