மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள். - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:02 pm

அஸ்ஸாமில் இருந்து ஈரோடு வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அதில் ரயில்வே போலீஸாா் சோதனை செய்தபோது முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரின்றி கிடந்த பை ஒன்றை சோதனை செய்தனா். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஈரோடு மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.