/

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

ஊத்துக்குளி, அம்மப்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்த பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:20 pm

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

ஊத்துக்குளி பகுதிக்குள்பட்ட அம்மப்பாளையம், ஒத்தைபனைமேடு, கீழோ்பதி, தாளபதி, செங்காளிபாளையம், சுக்காகவுண்டன்புதூா், திருவாய் முதலியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: வெண்ணெய்க்கு புகழ்பெற்ற ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிப்பு நிலையம் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோயில் மண் சாலை எனது சொந்த செலவில் தாா் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ரூ.8 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். அதன் மூலம் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கினாா். வாக்குச் சேகரிப்பின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.