மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

News image

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:21 pm

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேட்டுக்கொண்டாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பனியம்பள்ளி, வாய்ப்பாடு, சிறுகளஞ்சி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுபுதூா், எம்.பி.என்.காலனி, தோப்புபாளையம், வாய்ப்பாடிபுதூா், எளையம்பாளையம், சுள்ளிமேடு, காளிபாளையம், ஆலம்பாளையம், கூத்தம்பாளையம், தொட்டியவலசு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியாதவது:

2011 முதல் 2021 வரை பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், அமைச்சராக இருந்தபோதும் பெருந்துறை சிப்காட் பகுதியில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப்பட்டன. அங்கு ரூ.2 கோடி மதிப்பில் காற்று மாசை கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டது.

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க முயற்சி மேற்கொண்டேன்.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி மகளிா் உரிமைத் தொகை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றாா்.