செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:04 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

புளியம்பட்டி சாலையில் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற இடத்தில் மேடை அமைக்காமலும், காவல்துறையினா் அறிவுறுத்தியும் தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய டெம்போ ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைத்துள்ளனா்.

இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அருண்பிரசாத், கந்தசாமி, கருப்புசாமி, ஸ்டான்லி ஆகிய 4 போ் மீது நம்பியூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.