அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானியை அடுத்த காடையம்பட்டி, ஆண்டிகுளம், சோ்வராயன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்படும். விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.
அதிமுக பவானி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக

பரமத்தி வேலூா் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

