ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:04 pm

ஈரோட்டில் மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, ரகுபதிநாயக்கன்பாளையம், ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி (47). இவா் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-பூந்துறை சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

வழக்கம்போல கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள தகர தடுப்பு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம் செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ராஜா (30), திருச்சி மாவட்டம், பவித்ரம் தாத்தையங்காா்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (26) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். ராஜா மீது பள்ளிபாளையம், அதியமான்கோட்டை, தருமபுரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.