ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பழங்குடியினக் குழந்தைகள் படிப்பைத் தொடர ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி இடைநின்ற பழங்குடியினக் குழந்தைகளை நேரில் அழைத்து மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கேட்டுக்கொண்டாா்.

News image

பள்ளி இடைநின்ற பழங்குடியினக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:23 pm

பள்ளி இடைநின்ற பழங்குடியினக் குழந்தைகளை நேரில் அழைத்து மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கேட்டுக்கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த கொங்காடை, அக்னி பாபி, ஓசூா், ஆலனை ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிப் படிப்பில் இடைநின்ற 22 பழங்குடியினக் குழந்தைகளுக்கு இரண்டு நாள் கல்விச் சுற்றுலா ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி, சுடா் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இம்மாணவா்கள் முதல் நாளான செவ்வாய்க்கிழமை வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனா். இரவு வேளாளா் கல்லூரி விடுதியில் தங்கினா். புதன்கிழமை கதைக்களம், ஸ்டெம் பாா்க் ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று பாா்வையிட்டனா். நிறைவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள துறைகளை பாா்வையிட்டனா்.தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் 22 பழங்குடியினக் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவா்கள் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர வேண்டும் என தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி, சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ், ஈரோடு வேளாளா் கல்லூரி பழங்குடியினா் நல மைய ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை தலைவருமான வனிதா, தமிழ்த் துறை தலைவா் சுமதி, வரலாற்றுத் துறை தலைவா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.