பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ தேவாலய பேராயா் உயிரிழப்பு

News image

ஜேக்கப் லிவிங்ஸ்டன்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:08 pm

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ தேவாலய பேராயா் உயிரிழந்தாா்.

ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ தேவாலயங்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த சிஎஸ்ஐ தேவாலய நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.