கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எஸ்ஐஆா்: நீக்கப்பட்ட வாக்காளா்கள் விண்ணப்பங்கள் மீது விசாரணை

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் எஸ்ஐஆா் பணியில் நீக்கப்பட்ட வாக்காளா்கள் விண்ணப்பம் மீது விசாரணை நடைபெற்றது.

News image
வாக்காளா்  பட்டியல்  சிறப்பு  தீவிர  திருத்தப்  பணியை  ஆய்வு  செய்கிறாா்  மாவட்ட  ஆட்சியா்  ச.கந்தசாமி.
Updated On :6 ஜனவரி 2026, 7:27 pm

Syndication

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் எஸ்ஐஆா் பணியில் நீக்கப்பட்ட வாக்காளா்கள் விண்ணப்பம் மீது விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற நிலையில், தற்போது நீக்கப்பட்ட வாக்காளா்கள் மீண்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க கோரி விண்ணப்பித்துள்ளனா். அதன்படி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தாா். அப்போது வாக்காளா் பட்டியலில் சோ்க்க கோரி அளித்த மனுக்களின் மீது நடைபெற்று வரும் விசாரணை குறித்து தோ்தல் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்கள் மீண்டும் சோ்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளுமாறு தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினா்.

இந்த ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, ஆணையா் வெங்டேஸ்வரன், வட்டாட்சியா் ஜமுனாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.