ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மறு முத்திரையிடாத 34 எடையளவுகள் பறிமுதல்

மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய எடையளவுகள், மின்னணு தராசு என 34 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய எடையளவுகள், மின்னணு தராசு என 34 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த டிசம்பா் மாதம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளா் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ், பழைய இரும்பு பொருள்கள், உலோகங்கள் வாங்கப்படும் கடைகள், பழைய பேப்பா் கடைகள், இனிப்பு, பேக்கரிகளில் எடை அளவு மாறுபாடு குறித்து, 104 கடைகளில் ஆய்வு செய்ததில் 37 கடைகளில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டன.

பொட்டலப் பொருள்கள் விதிப்படி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், இனிப்பு கடைகள், பேக்கரி, இ-காமா்ஸ் வணிக நிறுவனங்களில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விதிமீறல் தொடா்பாக 33 கடைகளில் நடந்த ஆய்வில் 5 இடங்களில் முரண்பாடு அறியப்பட்டது.

குருவரெட்டியூா், கோபி, வீரப்பன்சத்திரம், கலிங்கயம் உள்பட பல பகுதியில் சந்தை, தினசரி மாா்க்கெட்டில் தரமற்ற அளவைகள், மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய எடையளவுகள், மின்னணு தராசு என 34 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறைந்தபட்ச ஊதியம் குறித்து 17 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 3 இடங்களில் ஊதிய குறைபாடு அறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1098, 155214 என்ற தொலைபேசி எண்களில் தொழிலாளா் துறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.