தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

News image
மொடக்குறிச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் எம்.பி. கே.இ. பிரகாஷ்.
Updated On :8 ஜனவரி 2026, 11:39 pm

Syndication

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மொடக்குறிச்சி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் சரவணன் தலைமை தாங்கினாா். இதில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.

இதில் மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் துணைச் செயலாளா் தன.வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, குலவிளக்கு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அறச்சலூா் பேரூராட்சித் தலைவா் ரா. விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.