மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஈரோடு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

ஈரோடு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் திரண்டு கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய இடத்தின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு ஈரோடு வடக்கு போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மதுக்கடை திறந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது, பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க முடியாது. காலை வேலைக்கு செல்லும் பெண்கள் பணி முடித்து இரவில் தனியாக வீடு திரும்பும்போது மது அருந்துவோரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இங்கு மதுக்கடை திறக்கும் திட்டம் இல்லை என்று போலீஸாா் உறுதியளித்ததையடுத்து பெண்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.