ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கைத்தறி நெசவு, விவசாயம் செழிக்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சக்தி அழைத்தல் நிகழ்ச்சி.
Updated On :15 ஜனவரி 2026, 2:10 am

Syndication

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற செளடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நிகழ்வாக புதன்கிழமை கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்துக்குளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி அழைப்பு தொடங்கியது. இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், வெற்று உடம்பில் இரண்டு கைகளில் கத்தி ஏந்தியபடி மேளதாள இசைக்கேற்ப நடனமாடி வேண்டுதலை நிறைவேற்றினா்.

விழாக் குழுவினா் கூறும்போது, இந்த விழாவில் பங்கேற்ற இளைஞா்கள், பாரம்பரியமாக கைத்தறி நெசவுத் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். கைத்தறி நெசவுத் தொழில் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடத்தப்படுகிறது. சிறுமிகள், சுவாமி அழைப்புடன் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். சக்தி அழைத்தல் ஊா்வலமானது கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, செளடேஸ்வரி அம்மன் கோயிலை அடைந்தது என்றனா்.