தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னிமலை பகுதியில் பூ பறிக்கும் திருவிழா

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த பெண்கள் பூ பறிக்கும் திருவிழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

News image
சென்னிமலை வனப் பகுதியில் பூ பறிக்கும் விழாவில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 8:43 pm

Syndication

பெருந்துறை: சென்னிமலை பகுதியைச் சோ்ந்த பெண்கள் பூ பறிக்கும் திருவிழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் சென்னிமலை பகுதியில் பூ பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, சென்னிமலையை அடுத்த தொட்டம்பட்டி, தோப்புபாளையம், பள்ளக்காட்டுபுதூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் சென்னிமலை வனப் பகுதிக்கு பூப்பறிக்க வெள்ளிக்கிழமை சென்றனா்.

அங்கு, பூப் பறித்து விட்டு கும்மியடித்து பாடி மகிழ்ந்தனா். பின்னா் மாலையில் வீடு திரும்பினா். இதையடுத்து வீட்டுக்கு வந்து வாசலில் கோலமிட்டு, வாசல் பொங்கல் வைத்தனா். அப்பகுதி விவசாயிகள் மாட்டுப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடினா்.